இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Time Using 05 ( வேலையில் உண்மை )

படம்
வேலையில் உண்மை                          True at work கொலோசெயர் 3:24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். குறிப்பிட்ட கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான சம்பளமே வழங்கப்பட்டது. அதிக சம்பளம் வழங்கினாலும் யாரும் நேர்மையாக உழைக்கவில்லை என்பது அந்த கம்பெனி முதலாளியின் எண்ணம். ஒரு முறை அங்கு சாதாரண சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன்னுடைய சம்பளத்தை பார்க்காமல் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து தன்னுடைய பணியில் நேர்மையாக இருந்து வந்தார்.  அவருடைய கடின உழைப்பைக் கண்ட மற்ற தொழிலாளர்கள் வீணாக அப்படி உழைக்காதே நீ எவ்வளவு வேலை செய்தாலும் அதற்கேற்ற சம்பளம் கிடைக்கப்போவது இல்லை எனவே உன்னை வருத்திக்கொள்ளதே என்று கடிந்து கொண்டனர். அதற்கு அந்த மனிதன் நான் இந்த முதலாளியிடம் நல்ல சம்பளம் எதிர்பார்த்து உழைக்கவில்லை. என்னுடைய பரம முதலாளியாகிய தேவன் எனக்கு நியாயம் செய்வார் என பதில் கூறினானாம்.  இன்றும் அநேக மேலதிகாரிகள் நன்மைக்கு அல்லாமல...

Time Using 4 ( நம்மை பராமரிக்கும் ஆண்டவர் )

படம்
நம்மை பராமரிக்கும் ஆண்டவர்                Jesus Christ Cares You யோபு 10:12 எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.         அமெரிக்க தேசத்திலே ஒரு பெரிய தொழிலதிபர் இருந்தார். நன்றாக நடந்து கொண்டிருந்த தொழிலில் திடீரென்று மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார் அவர்.            மிகப்பெரிய பணநெருக்கடியில் அவர் இருந்ததால், அவரது நண்பர்கள் மட்டுமல்ல; அவரது மனைவியும்கூட அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள்.            அந்த கவலையின் நேரத்தில் அவரை ஆறுதல்படுத்த யாருமே இல்லை. எல்லோரும் அவரை தனியாக விட்டு சென்றுவிட்டனர்.            அந்தக் கஷ்டத்தின் மத்தியில் ஒரு கொடிய வியாதி அவரைத் தாக்கி பலவீனப்படுத்தியது. அவருடைய இரண்டு நுரையீரல்களும் பழுதடைந்துவிட்டன. அந்த வியாதியோடு அவர் போராடிக் கொண்டிருந்த அந்த சூழ்நிலையில் அவருடைய பழைய நண்பர் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்துவிட்டு செ...

Time Using 03 ( அடைக்கலான் குருவிகள் )

படம்
அடைக்கலான் குருவிகள் The Sparrows அடைக்கலான் குருவிகள் இன்றைய நாளில் அழிந்து கொண்டிருக்கும் இனமாக உள்ளது. மாறிப்போன வாழ்க்கை முறையின் காரணமாக குருவி இனங்களை பாதுகாக்க மனிதர்கள் தவறி விட்டனர். எங்கள் வீட்டின் முன்பகுதியில் இந்த குருவிகள் கூடு அமைத்து இருந்தன. சில வேளைகளில் அவை எங்கள் வீட்டிற்குள் புகுந்து பின்பு வெளியே செல்ல முடியாமல் தவிக்கும். அவைகளை எடுத்து கூட்டில் வைத்து அடைக்கலம் கொடுத்தோம். இந்த அடைக்கலான் குருவிகளைக் குறித்து வேதம் கூறும் காரியங்களை தியானிப்போம்.  1. மதிப்பில்லாத குருவிகள் லூக்கா 12:6 இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுவதில்லை. அடைக்கலான் குருவிகள் அந்த நாட்களில் மக்களால் ஒரு விலை மதிப்பில்லாத பறவையாக காணப்பட்டது. இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்றார்கள். ஆனால் அவ்வாறு உலக மக்களால் மதிக்கப்படாத ஒரு குருவியை குறித்து தேவன் கூறும் காரியங்களை பாருங்கள். அவைகளில் ஒன்றும் மறக்கப்படுவதில்லை என்று. ஆம் நம் கர்த்தர் நம்மை மறந்து விடுகிற தேவன் அல்ல. உலகத்தாரின் பார்வையில் நாம் ஒன்றுக்கும்...

Time Using 02 ( விசுவாசமுள்ள ஜெபம் )

படம்
விசுவாசமுள்ள ஜெபம் Succes in Jesus Christ   மாற்கு 11:24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். ஒரு சமயம் நாத்திகன் ஒருவன் மதுபானக் கடை ஒன்றை முதலாவதாக பட்டணத்தில் திறக்க அனுமதி பெற்றிருந்தான்.அந்தக்கடை அந்த பட்டணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் இருக்கபோகிறபடியால் அந்த ஆலய விசுவாசிகள் அதை விரும்பவில்லை. விசுவாசிகள் எல்லாரும் அந்த மதுக்கடை இல்லாமல் போகும்படி தேவனிடத்தில் ஜெபித்தார்கள். அந்தக்கடை திறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர்கள் ஜெபித்தபடி மின்னல் தாக்கி அந்த கடை எரிந்து தரைமட்டமானது. விசுவாசிகள் எல்லோருக்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. ஆனால் அந்த மதுபானக்கடை உரிமையாளரோ இந்த விசுவாசிகள் ஜெபித்ததின் விளைவாகத்தான் அவருடைய கடைக்கு இவ்விதம் சம்பவித்தது என்று விசுவாசித்து ஜெபித்த கிறிஸ்தவர்களை நீதிமன்றத்திற்கு இழுத்தார். விசுவாசிகளோ, தங்களுக்கும் கடை எரிந்து சாம்பலானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார்கள். முதல் வாய்தாவிலே நீதிபதி இ...

Time Using 01 ( நன்மை செய்யப்படியுங்கள் )

படம்
நன்மை செய்யப்படியுங்கள்             Read on to do good யாக்கோபு 4:17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும் . ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளமிங் அவனை காப்பாற்றினார். ஃப்ளமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான். அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி ஃப்ளமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிற...