இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Time Using 10 (வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை)

படம்
வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை  < Remember the Creator God in the youth> பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.          ஒரு சுவிசேஷகர் உல்லாசமாய் தன் வாழ்வை நடத்தி கொண்டிருந்த ஒரு வாலிபனிடம் போய், 'நீ மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள். அவரே உன் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வை தருவார்' என சுவிசேஷத்தை அறிவித்தார். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? 'வாலிபம் வாழ்வதற்கே, நான் வயதானபின் ஆண்டவரை ஏற்று கொள்வேன்' என்றான்.           ஆம்; உலக மக்கள் இப்படித்தான் எண்ணி கொள்கிறார்கள். 'வயதானப்பின் கோவில் குளம் என்று சுத்து' என்பதுதான் நம் நாட்டவரின் சகஜ பேச்சு. எனக்கு தெரிந்த 80 வயதான ஒருவர், நடக்கவே முடியாத நிலை, உடலில் வேறு வியாதிகள், ஆனால் ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்கு 18 படிகள் ஏறிவிட்டு வருவார். அவரின் வாலிப நாட்களில் செய்யாததை இப்போது உடலில் எல்லாம் ஒடுங்கி விட்ட...

Time Using 09 ( சீலோவாம் )

படம்
சீலோவாம்                                Siloam சீலோவாம் என்ற குளத்தில் சென்று கண்களை கழுவி பார்வையடைந்த மனிதனின் சம்பவத்தை நாம் எல்லோரும் அறிவோம். இந்த சீலோவாம் குளத்தின் மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுத்தரும் காரியங்களை இந்த நாளில் தியானிப்போம்.  1. அனுப்பப்பட்ட சீலோவாம் யோவான் 9:7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.      சீலோவாம் என்றால் அனுப்பப்பட்டவன் என்று பொருள்படும் . அந்த அனுப்பப்பட்ட சீலோவாமில் சென்று கண்களை கழுவிய குருடன் சுகம் பெற்றான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை ஆண்டவர் இந்த உலகத்தில் அனுப்புவதாக கூறி உள்ளார். ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புவது போல ஆண்டவர் நம் எல்லாரையும் சுவிசேஷத்தை அறிவிக்க அனுப்பி உள்ளார் என்று வேதம் கூறுகிறது. லூக்கா 10:3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக...

Time Using 08 ( இளைப்பாறுதல் தரும் தேவன் )

படம்
இளைப்பாறுதல் தரும் தேவன்       இளைப்பாறுதல் தரும் தேவன் இளைப்பாறுதல் என்றால் ஆங்கிலத்தில் Rest அல்லது தமிழில் ஓய்வு என்று பொருள்படும். இளைப்பாறுதல் இல்லாமல் இன்று அநேகர் சமாதானமின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இளைப்பாறுதல் தரவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த உலகத்தில் வந்தார். இந்த இளைப்பாறுதல் குறித்து வேதம் நமக்கு கற்றுத்தரும் காரியங்களை இந்த நாளில் தியானிப்போம்.  1. இயேசுவிடம் நாம் வரும்போது இளைப்பாறுதல் எரேமியா 6:16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்...... முதலாவது பார்த்தால் நாம் நல்ல வழி எது என்று பார்த்து அதில் நடந்தால் நம்முடைய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எரேமியா தீர்க்கதரிசி கூறுகிறார். நல்ல வழி என்றால் என்ன?????? இயேசு சொன்னார் நானே வழி என்று. யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில...

Time Using 07 ( நன்மையை அருளும் தேவன் )

படம்
நன்மையை அருளும் தேவன்       நன்மையை அருளும் தேவன் நன்மைகள் அல்லது ஆசீர்வாதங்கள் நம்முடைய பிதாவிடம் இருந்தே இறங்கி வருகிறது. இயேசு கிறிஸ்து  யார் யாருக்கெல்லாம் நன்மைகளை அளிக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.  1. தம்மை தேடுகிறவர்களுக்கு நன்மை அளிக்கிறார் சங்கீதம் 34:10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது. ஆண்டவராகிய தேவன் தம்மை தேடும் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மைகளை வழங்குகிறார். சங்கீதக்காரன் கூறியது போல காட்டிற்கு இராஜாவாகிய சிங்கத்தின் குட்டிகளே பட்டினியடையலாம். ஆனால் இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்துவை தேடுபவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது. தானியேலின் வாழ்க்கையில் பார்த்தால் அவன் அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் ஆண்டவரை தேடினதின் நிமித்தம் சிங்கக்கெபியில் போடப்பட்டான். ஆனால்,  ஆண்டவர் அற்புதமாக தானியேலை சிங்கங்களின் வாய்க்கு தப்புவித்து எல்லாருக்கும் முன்பாக உயர்த்தினார். ஆண்டவரை நாம் முழு மனதோடு தேட வேண்டும். அவர் வார்த்தைகளை தியானிக்க வேண்டும். அவ்வாறு ஆண்டவர...

Time Using 06 ( ஆவியில் எளிமை )

படம்
ஆவியில் எளிமை                       Simplicity in Spirit மத்தேயு 5:3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. இவ்வுலகில் அநேகர் பணம், பொருள் ஆகியவற்றை மிகுதியாக சம்பாதித்து மிகப்பெரிய ஐசுவரியவானாய் வாழ விரும்புகின்றனர். ஐசுவரியவானாய் வாழ்ந்தாலும், தரித்திரனாய் வாழ்ந்தாலும் ஆவியில் எளிமை இருந்தால் மட்டுமே பரலோக இராஜ்யத்தை சுதந்தரிக்க முடியும் என்று இயேசு கிறிஸ்து தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். வேதத்தில் கூறப்பட்டுள்ள சில ஆவியில் எளிமையுள்ளவர்களை இந்த நாளில் தியானிப்போம். 1. ஆவியில் எளிமையுள்ள ஆயக்காரன் ஆயக்காரன், பரிசேயன் உவமையில் இருவருமே ஜெபம் செய்வதற்கு ஆலயம் செல்கின்றனர். பரிசேயனோ உபவாசிக்கிறவனாயும், தசம பாகம் செலுத்துகிறவனாயும் காணப்பட்டும் அவனிடம் ஆவிக்குரிய எளிமை இல்லாத காரணத்தால் மற்றவர்களை அற்பமாக எண்ணினான். ஆனால் ஆயக்காரன் ஆவியில் எளிமை கொண்டிருந்ததால் கர்த்தரை நோக்கி தன்னை தாழ்த்தி ஜெபித்தான். ஆவியில் எளிமையுள்ள ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டான் என்று பார்க்கிறோம்.  லூக்...