Time Using 10 (வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை)
வாலிபத்திலே சிருஷ்டிகரை நினை < Remember the Creator God in the youth> பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. ஒரு சுவிசேஷகர் உல்லாசமாய் தன் வாழ்வை நடத்தி கொண்டிருந்த ஒரு வாலிபனிடம் போய், 'நீ மனம் திரும்பி இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்று கொள். அவரே உன் மரணத்திற்குப்பின் நித்திய வாழ்வை தருவார்' என சுவிசேஷத்தை அறிவித்தார். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? 'வாலிபம் வாழ்வதற்கே, நான் வயதானபின் ஆண்டவரை ஏற்று கொள்வேன்' என்றான். ஆம்; உலக மக்கள் இப்படித்தான் எண்ணி கொள்கிறார்கள். 'வயதானப்பின் கோவில் குளம் என்று சுத்து' என்பதுதான் நம் நாட்டவரின் சகஜ பேச்சு. எனக்கு தெரிந்த 80 வயதான ஒருவர், நடக்கவே முடியாத நிலை, உடலில் வேறு வியாதிகள், ஆனால் ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்கு 18 படிகள் ஏறிவிட்டு வருவார். அவரின் வாலிப நாட்களில் செய்யாததை இப்போது உடலில் எல்லாம் ஒடுங்கி விட்ட...