இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இக்காலத்தில் பாடுகள்

படம்
  “இக்காலத்துப் பாடுகள்”( ரோமர் 8 : 18)     இக்காலத்து என்று சொல்லப்படுவது ஒரு குறிக்கபட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட என்று பொருள்படும். அது என்றென்றைக்கும் இருக்கும்படியானவைகள் அல்ல. கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள் பெரிதான பங்கை வகிக்கின்றன. பாடுகள் இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒருபோதும் போதிக்கவில்லை. சொல்லப்போனால் உன்னத ஊழியக்காரனாகிய பவுலுக்கும் முள் கொடுக்கப்பட்டிருந்தது.      பொதுவாக பாடுகள் நாம் விரும்பும்படியானவைகள் அல்ல. அதை மனிதர்களாகிய நாம் ஒருபோதும் விரும்புவதும் இல்லை. ஆனால் தேவன் சிறந்த நோக்கத்திற்கென்று ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவைகளை இணைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அநேக போலியான போதனைகளில் பாடு இல்லாத கிறிஸ்தவ வாழ்க்கை வாக்களிக்கப்படுகிறது. பாடுகளுக்கு உடனடி நிவாரணம் என்று அநேக கள்ளப்போதகர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். நீ அவர்களால் ஒரு போதும் ஏமாற்றம் அடையாதே.     முதலாவது, பாடுகள் உன்னுடைய வாழ்க்கையில் நீ யார் என்பதை உணரச்செய்கிறது. நீ ஒரு பெலவீன பாண்டம் என்று அறியச் செய்கிறது. ஆம்! பவுல் நம்மை மண்பாண்டம் என்று அழைக்கிறார். ஒ...

Time Using 15 (விடுதலையின் வாழ்வு)

படம்
விடுதலையின் வாழ்வு                     Life of Liberation சங்கீதம் 146:7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டப்பட்ட சூழ்நிலையில் உள்ள மனிதர்களை விடுவிக்கிறவராக இருக்கிறார். எவைகளால் கட்டப்பட்டவர்களை கர்த்தர் விடுவிக்கிறார் என்பதை இந்த நாளில் தியானிப்போம்.  1. பாவத்தில் கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்த பூமியில் இறங்கி வந்ததே நம்மை பாவத்தில் இருந்து விடுதலை செய்வதற்கே. காலாகாலமாய் பாவத்தில் அடிமைப்பட்டு, பாவத்தின் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்த மனிதர்களுக்கு ஒரு விடியலை அளிக்கவே இயேசு கிறிஸ்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிலுவையில் சிந்தினார். வேதம் சொல்லுகிறது ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்  என்று. சத்திய ஆவியாகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசித்து அவரிடம் நம்முடைய பாவங்களை உணர்ந்த...