கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சமாதான காரணர் !
“இவரே சமாதான காரணர்” (மீகா 5:5) The Lord Jesus Christ is the peacemaker நாம் சமாதானமற்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் சமாதானக் குறைச்சல் மலிந்துக்கிடக்கின்றது. நாட்டுக்கு நாடு சமாதானமின்மை, சமாதானமற்ற சூழ்நிலைகள் எங்கும் காணப்படுகிறது. சமாதானமின்மை அநேக குடும்பங்களில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சமாதானமின்மை குடும்பங்களில் கணவன், மனைவி, பிள்ளைகள் மத்தியிலுறவைப் பாதிக்கிறது. வெறுப்பு, கசப்பு போன்ற கனிகள் அங்கு காணப்படுகின்றன. தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் இருதயத்திலும் சமாதானமின்மை ஆளுகை செய்கிறது. மேலலே சொல்லப்பட்ட இந்த வசனத்தை "மீகா தீர்க்கத்தரிசி" , வரப்போகிற மேசியாவான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து இவ்விதம் சொல்லியிருக்கிறார். ‘ இவரே சமாதான காரணர் ‘ இவரே சமாதானத்தின் ஊற்று, இயேசு கிறிஸ்து இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. இயேசு கிறிஸ்துவின் ஆளுகை இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது. அநேகருடைய வீட்டில் ‘ இயேசு கிறிஸ்துவே இந்த வீட்டின் தலைவர் ‘ என்ற வசனப்பலகை மாட...