இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Time Using 13 (தீமை துன்மார்க்கனை கொல்லும்)

படம்
தீமை துன்மார்க்கனை கொல்லும்                       Evil kills the wicked ஒரு குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியின் முன்னேற்றத்தை கண்டு பொறாமை கொண்ட குயவன் ஒருவன் இராஜாவிடம்போய், இராஜாவே நமது நாட்டில் பிரசித்தி பெற்ற சலவைத் தொழிலாளி இருக்கிறார் எனவே நமது யானைகள் ஏன் கறுப்பாக இருக்க வேண்டும்???? அவற்றை வெண்மையாக வெளுத்துத்தர அந்த சலவைத்தொழிலாளியிடம் கூறலாமே என்றான். இராஜாவும் அப்படியே கட்டளை கொடுத்தான். குயவனுக்கு ஒரே ஆனந்தம். சலவைத் தொழிலாளியின் தலை சீவப்படும் நாளை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தான். ஆனால் தந்திரமான சலவைத்தொழிலாளி இராஜாவைப் பார்த்து, இராஜாவே கறுப்பு யானைவை வெண்மையாகச் சலவை செய்வது மிகவும் எளிது. ஆனால் யானையை வைக்கும்படி ஒரு பெரிய உறுதியான மண்பானையை செய்துதரும்படி குயவனுக்குக் கட்டளை கொடுக்க வேண்டும் என்றான். கட்டளை பிறந்தது, இரவுபகலாய் மாபெரும் பானையை குயவன் செய்ய முயன்றான். ஆயினும் யானையின் கால்பட்டதும் நொறுங்கிப்போயின. தன் பொறாமையால் வெட்டிய குழியில் தானே விழுந்த குயவன் இராஜாவால் வெட்டுண்டு மரித்தான். பரிசுத்த வேத...

Time Using 12 (ஒருமனம்)

படம்
ஒருமனம்                            ONE MIND ஒருமனம் என்பது ஒரே சிந்தை அல்லது ஒரே எண்ணம் என்று பொருள்படும். கிறிஸ்தவர்கள் ஒரு மனம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும் என தேவன் விரும்புகிறார். எவற்றில் எல்லாம் நாம் ஒருமனப்பட்டு இருக்க வேண்டும் என்பதை இந்த நாளில் தியானிப்போம். 1. ஜெபத்தில் ஒருமனம் மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். கர்த்தராகிய   இயேசு கிறிஸ்து நாம் ஒருமித்து ஜெபிக்கும் ஜெபங்களில் ஒருமனம் காணப்பட வேண்டும் என்று விரும்புகிறார். நம்முடைய குடும்ப ஜெபம் அல்லது எந்த ஜெபக்கூடுகையாயினும் அங்கு உள்ளவர்களுக்கு ஜெபிக்கிற காரியங்களில் ஒரே சிந்தை இருந்தால் அவர்கள் வேண்டிக்கொள்ளுவதை கர்த்தர் அருளிச்செய்வார். இன்று நம்முடைய ஜெபத்திற்கு பதில் கிடையாமல் இருப்பதற்கு ஒருமனம் இல்லாமையும் காரணமாக இருக்கலாம். இன்ற...

Time Using 11 (அழிவுக்கு முன்னானது அகந்தை)

படம்
அழிவுக்கு முன்னானது அகந்தை   PRIDE IS BEFORES DESTRUCTION தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் ( Nepolean Bonaparte ) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸ் அரசாங்க மதமாக கத்தோலிக்க மதமே இருந்து வந்தது. பிரான்ஸ் நாட்டின் முதல் மன்னனாக நெப்போலியன் முடிசூட்டி கொள்வதற்காக போப்பையும் அழைத்திருந்தான். முடிசூட்டும் விழா Notre Dam என்னும் இடத்திலுள்ள பெரிய கதீட்ரலில் (Cathedral) 1804-ல் டிசம்பர் மாதம் 2ம் தேதி நடைபெற்றது. அந்நாளில், போப்பும், அவருடன் கார்டினல்களும், மேலே ஆல்டர் இருக்கும் இடத்தில் காத்திருக்க, நெப்போலியன் தன் மனைவி ஜோஸப்பினின் கைகளைப் பிடித்தபடி நடந்து மேலே ஏறினான். அனைவர் கண்களும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது போப்பின் முன் முழங்கால் படியிடுவான் என அனைவரும் எதிர்ப்பார்த்திருக்க, மேலே ஏறிப் போன நெப்போலியன், போப்பின் கையிலிருந்த கிரீடத்தை பிடுங்கி, ஆல்டர் இருக்கும் இடத்திற்...