இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விசுவாசம்

படம்
மத்தேயு 21:22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமயிருக்கிறது . அந்த விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்றும் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் என்றும் அநேக இடங்களில் வேதத்தில் காணலாம். வேதத்தில் அநேக பரிசுத்தவான்களின் விசுவாச வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக தரப்பட்டுள்ளது. அவைகளைக் குறித்து இன்று தியானிப்போம். 1. இயற்கைக்கு அப்பாற்பட்ட விசுவாசம் விசுவாசம் என்று கேட்டவுடனே ஞாபகம் வருவது ஆபிரகாம். அவன் விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்பட்டான். ஆபிரகாமுக்கு பிள்ளை இல்லாதிருந்த போது கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களை போல பெருகப் பண்ணுவேன் என்று வாக்குப்பண்ணுகிறார். ஆதியாகமம் 15:5,6 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். *அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்க...

வழி காட்டும் தேவன்...

படம்
கிறிஸ்துமஸ் காலங்களில் இருக்கும் நாம் ஆண்டவரின் பிறப்பைக்குறித்து பல காரியங்களை கேட்டு வருகிறோம். ஆண்டவரின் பிறப்பை உலகிற்கு தெரியப்படுத்த ஆண்டவர் பலவற்றை உபயோகப்படுத்தினார். அவ்வாறு ஆண்டவரின் பிறப்பை வழிகாட்ட பயன்படுத்தப்பட்ட காரியங்களைக் குறித்து இந்த நாளில் நாம் தியானிப்போம்.  1. நட்சத்திரத்தின் மூலம் வழிகாட்டிய தேவன் மத்தேயு 2:1,2 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். இயேசு பிறப்பை சாஸ்திரிகள் கண்டுகொள்ள வழி காட்டியது அந்த கிழக்கில் தோன்றிய நட்சத்திரமே. அது சரியான பாதையில் அவர்கள் செல்லவும். கிறிஸ்துவை கண்டு கொள்ளவும் வழிவகை செய்தது. நட்சத்திரத்தை பின்பற்றி வந்தவர்கள் மேசியா ராஜ அரண்மனையில் பிறப்பார் என்ற நம்பிக்கையில் ஏரோதிடம் சென்று விசாரித்தார்கள். ஆனால் அங்கு நடந்ததே வேறு. நட்சத்திரத்தை மீண்டும் கண்ட அவர்கள் ஆனந்த சந்தோஷமடைந்து பிள்ளை இருக்கும் இடத்தை கண்டடைந்த...